செர்பியாவில் 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Date:

செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கடந்த 3 ஆம் திகதி 13 வயது பாடசாலை மாணவன் தன் சக மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த பயங்கர சம்பவம் அரங்கேறிய மறுநாளே தென்பெல்கிரேடில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் செர்பியாவை அதிரவைத்தது.

இந்தநிலையில் செர்பியாவில் உள்ள பாடசாலைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 78 ஆரம்ப பாடசாலைகள், 37 உயர் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதைதொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...