திருமலை சண்முகா கல்லூரி ஆசிரியர் ஆடை விவகாரம்: நீதியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

Date:

ஆசிரியரின் கலாசார ஆடையான ஹபாயா விவகாரத்தை முன்னிட்டு இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் ஆடை சுதந்திரத்திற்காகவும் நீதிமன்றத்தில் 05 வருடங்களாக விவாதித்து வழக்கை வென்று தந்த குரல் என்ற அமைப்பின் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தது.

இந்நத விடயம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

திருகோணமலை சண்முகா ஆசிரியர் அபாயா ஆடை விவகாரம் தொடர்பில்குரல் கொடுத்தஇ முயற்சிகள் செய்த, அல்லாஹு தஆலாவிடத்தில் குறித்த ஆசிரியைக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவும் இருகரம் ஏந்திய அனைவருக்கும் ஈருலகத்திலும் நலவுகளை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வதாகவும் உலமா சபை தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் விடயத்தில் நீதிமன்றம் நாட்டின் யாப்பின் அடிப்படையிலும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் பிரஜைகளுடைய அடிப்படை மத உரிமைகளை கவனத்தில் கொண்டும் நியாயமான, நீதமான ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது எமது நாட்டின் நீதித்துறையின் நேர்மையையும் சுயாதீனத்தையும் எடுத்துக்காட்டுவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சுட்டிக்காட்டியுள்ளது.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...