நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

Date:

ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பியுள்ளார்.

லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுக்காக ஜனாதிபதி கடந்த வியாழன் அன்று ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்டார்.

அங்கு, மூன்றாம் சார்லஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

பின்னர் கானா மற்றும் ருவண்டா ஜனாதிபதிகளுடனும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார்.

தொடர்ந்து, சனிக்கிழமை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வில் பங்கெடுத்த ஜனாதிபதி, சார்லஸ் மன்னரைச் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...