நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

Date:

ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பியுள்ளார்.

லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுக்காக ஜனாதிபதி கடந்த வியாழன் அன்று ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்டார்.

அங்கு, மூன்றாம் சார்லஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

பின்னர் கானா மற்றும் ருவண்டா ஜனாதிபதிகளுடனும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார்.

தொடர்ந்து, சனிக்கிழமை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வில் பங்கெடுத்த ஜனாதிபதி, சார்லஸ் மன்னரைச் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...