டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து சேவையை தரமான சேவையாக மாற்றுவதற்கு அமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேவேளை, பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.