பாவனைக்குதவாத 30 மில்.ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் !

Date:

இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல உற்பத்திகளை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதேநேரம், கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்களின் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபா என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த உற்பத்திகள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி சந்தையில் விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட பொருட்களை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...