மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

Date:

மலையக ரயில் பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான ரயில் போக்குவரத்து இதுவரை வழமைக்கு திரும்பவில்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில் குறித்த பாதை இதுவரை சீர்செய்யப்பட்டவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் ரயில்கள் மற்றும் பதுளையிலிருந்து நானுஓயா வரை பயணிக்கும் ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களுக்கு இடையில் பஸ்கள் மூலம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...