மே மாத இறுதிக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!

Date:

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் இறுதி வாரத்தில் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கைக்காக இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தனது அவதானிப்புகளை உரிய தரப்பினருக்கு விரைவில் அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை ஏப்ரல் 11ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆர்வமுள்ள தரப்பினருக்கு இடைக்கால அறிக்கை ஏப்ரல் 27ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கையை தயாரிக்கும் போது முன்மொழிவுகள் கவனத்திற்க் கொள்ளப்படவுள்ளன. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 4,000 ஆக குறைக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...