யாழ். மாவட்டத்தில் மே 16, 17 இல் விசேட செயற்திட்டம்!

Date:

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போதைய வானிலை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கு அபாயநிலை காணப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு மே மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை முன்னெடுக்காதுவிடின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் மாதங்களில் அதிகரித்துச் செல்லும் என அஞ்சப்படுகின்றது.

சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகம் இணைந்து கழிவு நீர் தேங்கிநிற்கும் பொருட்களை உரிய முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இச் செயற்திட்டம் தொடர்பான கால அட்டவணை கிராமசேவகர் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். எனவே பொதுமக்கள், பொது அமைப்புக்கள் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ். மாவட்ட செயலகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...