IPL 2023: ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தியது குஜராத் அணி!

Date:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் சிக்கியது. அணித்தலைவர் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ஓட்டமும், டிரெண்ட் போல்ட் 15 ஓட்டமும் எடுத்தனர்.

குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான விரித்திமான் சகா, ப்மன் கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் சேர்த்தனர். ப்மன் கில் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடினார். சகா 41 ஓட்டத்தில், பாண்ட்யா 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், குஜராத் அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...