வலிநிவாரணி மருந்து கொடுப்பது தொடர்பில் அவதானமாக இருக்கவும்!

Date:

தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள தகுதியற்ற வைத்தியர்கள் டெங்கு நோயாளர்களுக்கு பராசிட்டமோலுக்கு பதிலாக வலி நிவாரணி மருந்துகளை வழங்குவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தகுதி வாய்ந்த வைத்தியர்கள் சிலர் இதே தவறை செய்வதால் நோயாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டெங்கு, இன்புளுவன்சா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதாகவும், நோயாளிகளின் உடல் வலியைக் குறைக்க மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகளை வழங்கி வருவதாகவும், டெங்கு நோயாளிகளுக்கு வலி நிவாரணிகளை வழங்கி நோயாளிகளின் உயிரையே ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

காய்ச்சலுக்கு மருந்து எடுக்கும் போது பராசிட்டமோலுக்கு பதிலாக வேறு வலி நிவாரணி கொடுத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நோயாளிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...