விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானிய வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை!

Date:

சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானிய வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இரசாயன அல்லது சேதன உரங்களை கொள்வனவு செய்வதற்கு மானிய வவுச்சர்கள் வடிவில் நிதி ஒதுக்கீடுகளை வழங்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000 விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஹெக்டேயருக்கு 20,000 ரூபாயும், இரண்டு ஹெக்டேயருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ்வருடம் சிறு போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 650,000 விவசாயிகளுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படுவதாகவும், இந்த வவுச்சர்கள் மூலம் விவசாயிகள் இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் விருப்பத்திற்கிணங்க, இரண்டு அரச உர நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் இரசாயன அல்லது சேதன உரங்களை அனைத்து உழவர் சேவை மையங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் கொள்முதல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...