வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Date:

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு பல வெசாக் வலயங்கள், பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் கொழும்பில் பாரிய பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பொலஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நேரில் சோதனை செய்வதற்கும் மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெசாக் விடுமுறை காலம் முழுவதும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவிலியன்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...