14 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு இல்லை: காமினி வலேபொட

Date:

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது, 14 இலட்சத்துக்கும் அண்மித்த எண்ணிக்கையிலான மாணவர்கள் போதியளவில் காலை உணவை உண்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவருமான காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.

காலை உணவைத் தவிர்ப்பது குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சோதனைகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐந்தில் ஒரு பங்கு சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையே சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் எனவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இன்று பிள்ளைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு பாரியதாகிவிட்டதாகக் கூறும் காமினி வலேபொட, பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக குழந்தைகளுக்கு முன்பைப் போன்று சத்தான புலால் உணவையும் மரக்கறி உணவையும் வழங்குவதற்கு பெற்றோரால் முடியவில்லை.

இதன் காரணமாக, எதிர்வரும் காலங்களில் குழந்தைகளிடையே போஷாக்கு குறைபாடுகள் அதிகரிக்கலாம் என சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...