27 ஆயிரம் கோடி ரூபாய் வரி அறவிட தவறியமை கண்டுபிடிப்பு

Date:

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரியை அறவிட தவறியுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.

இதேவேளை, முறையாக வரியை செலுத்தாத பாரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் 100 பேரின், சரியான தகவல்கள் இறைவரித் திணைக்களத்திடம் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான பரிவர்த்தனைகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள உரிய முறைகள் எதுவும் இறைவரித் திணைக்களத்திடம் இல்லை என்பதுத் தொடர்பில், இந்த மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அறவிடுவதற்கு தவறவிடப்பட்டுள்ள இந்தப் பணத்தை மீள பெற்றுக்கொள்வதற்கு பொறிமுறை ஒன்றைத் தயாரிக்கவும், புதிய இறைவரிச் சட்டங்களை தயாரிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை இந்த மேற்பார்வைக்குழு வழங்கும் எனவும் அதன் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...