4000 வருட பழமையான இலங்கை- இஸ்ரேல் உறவை கட்டியெழுப்ப நட்புறவு சங்கம் உதயம்!

Date:

75 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கின்ற இலங்கை- இஸ்ரேலுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்பும் வகையில் உருவாக்கப்பட்ட இலங்கை- இஸ்ரேல் நட்புறவு சங்கத்தின் முதலாவது பொதுக்கூட்டம் கடந்த 14 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.

நட்புறவு சங்கத்தின் தலைவர்  சானுகா இலங்க சேகர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேனபதியே ஆனந்த நாகிமி தேரர் அவர்கள் பிரதான உரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள், வேடுவர் சமூகத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான மோசஸ் சாலமன் காலத்திலிருந்தான 3000-4000 வருட பழைமை வாய்ந்த உறவுகள் பற்றி இந்நிகழ்வில் விபரிக்கப்பட்டதோடு இனிவரும் காலங்களில் கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை பலப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

 

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...