Update:- களுத்துறை யுவதியின் மர்ம மரணம்: பிரதான சந்தேக நபர் கைது!

Date:

களுத்துறையில் 16 வயதுடைய திஹார நிர்மானி நிஸ்ஸங்க சில்வா என்ற யுவதியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் காலி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் பிரிவு பொலிஸ் குழு இன்று காலை காலி பிரதேசத்தை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபரை களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிக்டொக் ஊடாக சுமார் 2 மாதங்களாக யுவதியுடன் காதல் வசப்பட்டிருந்த நபர், கடந்த 6ஆம் திகதி யுவதியை விடுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் ஹொட்டலின் 3வது மாடியிலிருந்து கீழே நிர்வாணமாக விழுந்த யுவதி சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...