Update:- களுத்துறை யுவதியின் மர்ம மரணம்: பிரதான சந்தேக நபர் கைது!

Date:

களுத்துறையில் 16 வயதுடைய திஹார நிர்மானி நிஸ்ஸங்க சில்வா என்ற யுவதியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் காலி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் பிரிவு பொலிஸ் குழு இன்று காலை காலி பிரதேசத்தை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபரை களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிக்டொக் ஊடாக சுமார் 2 மாதங்களாக யுவதியுடன் காதல் வசப்பட்டிருந்த நபர், கடந்த 6ஆம் திகதி யுவதியை விடுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் ஹொட்டலின் 3வது மாடியிலிருந்து கீழே நிர்வாணமாக விழுந்த யுவதி சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...