அலி சப்ரி ரஹீம் பெருந்தொகையான தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது: அரசியல் தலையீடு இன்றி விசாரணைகளை நடத்துமாறு ஹர்சன ராஜகருண கோரிக்கை

Date:

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது இது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண கருத்து வெளியிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் எமது புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் மூன்று கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுளளதாக கூறப்படுகிறது.

இப்படியான சம்பவங்களின் போதே எமது நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தரப்பிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என ஹர்சன ராஜகருண கூறியுள்ளார்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...