இந்திய விமானப்படையின் தலைமை தளபதியும், இலங்கை கடற்படை தளபதியும் சந்திப்பு!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதரி, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அழைப்பின்பேரில் இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள்  மே 01ம் திகதி கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கை வந்தடைந்த்தார்.

வருகை தந்த இந்திய விமானப்படை தளபதிக்கு கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களின் தலமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது இருநாட்டு கூட்டு பயிற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புகள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னம்களும் பரிமாறப்பட்டதுடன் இந்திய விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...