இலங்கையின் மூத்த இராஜதந்திரி ஜயந்த தனபால காலமானார்!

Date:

மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் .

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றினார்.

மேவேளை ஜயந்த தனபால 1998-2003 க்கு இடையில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி இருந்தார்.

இவர் 30/12/1938 அன்று கண்டியில் பிறந்தார், மத்திய மாகாணத்தின் மாத்தளையில் மிக முக்கியமான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

தனது அடிப்படைக் கல்வியை கண்டி திரித்துவக் கல்லூரியிலும் உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

இளம் வயதிலேயே இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இணைந்து, லண்டன், பெய்ஜிங், வாஷிங்டன், புதுடெல்லி, ஜெனிவா ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். 1984ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், 1995ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...