‘ஏனைய மதத்தவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்’

Date:

எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே நாட்டில் இன, மதவாதப் பிரச்சினைகள் இருக்கின்றன. இப்பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? என பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை திட்டமிட்டு அவமதிக்கிறார்கள். இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. பாராளுமன்றத்தில் கூட பேசுகிறார்கள். முன்னாள் எம்.பி ஒருவர் என்னை தூக்கிலிட வேண்டுமென்கிறார்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஏனைய மதத்தவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மதங்கள் தொடர்பில் உள்ள பிரச்சினைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் பிரிவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவொரு நல்ல விடயம் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...