ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Date:

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணி வரை இது அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச செயலகப் பகுதியிலும் மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல பிரதேச செயலகப் பகுதியிலும் நாளை காலை 9 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

மேலும், காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளிலும், யட்டியந்தோட்டை, ரம்புக்கன, தெரணியகல, மாவனல்ல, கேகாலை, கலிகமுவ பிரதேச செயலகப் பகுதிகளிலும், கேகாலை மாவட்டத்திலும் வசிப்பவர்களுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...