கொவிட் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

Date:

கொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடணப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைடைந்ததை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறுகிறது.

கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களில், கொவிட் வைரஸை எதிர்கொள்வதற்கான குறிப்பிடத்தக்க நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களிடையே உருவாகியுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது.

கடந்த 03 ஆண்டுகளில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தமையினால், உலக சுகாதார ஸ்தாபனம்  கொவிட் தொற்றுநோயை அவசர நிலைமையாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், கொவிட் -19 இன் தற்போதைய பரவலைப் பற்றிய விரிவான ஆய்வுக்குப் பிறகு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக் குழு, இது இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது என்று அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நாளாந்தம் சுமார் 06 கொவிட்-19 நோயாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், அது ஆபத்தான நிலைமையல்ல என தொற்றுநோய் பிரிவின் தலைவர் டாக்டர் சமிதி கினிகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...