சூடானில் உள்நாட்டு யுத்தத்தால் மில்லியன் கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர்!

Date:

ஒரு மாதமாக சூடானில் இடம்பெற்றுவரும் மோதல்களால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நாட்டின்  எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ளனர்.

போருக்கு அஞ்சி ஏராளமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தலைநகர் கார்ட்டூமில் உள்ள மருத்துவமனைகளில் தண்ணீர் கூட இல்லாத அவலம் நிலவுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி சூடானில் இராணுவ படைகளுக்கும் (SAF) துணை இராணுவப் படைக்கும் (RSF) இடையே தலைநகர் கார்டூமில் உள்நாட்டு போர் மூண்டது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு பொது சேவை மையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சூடான் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் ஒரு 1.3 மில்லியனுக்கும் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக ஐ.நா புலம்பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

190 குழந்தைகள் உட்பட 863 அப்பாவி மக்கள் இந்தப் போரால் உயிரிழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்படும் போது உணவு, தண்ணீர் எடுப்பது, செல்போனை சார்ஜ் செய்வது என அன்றாடம் அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர்.

திங்களன்று, ஒரு வார கால போர்நிறுத்தம் தொடங்கியது, மோதலின் ஏழாவது, நகரின் சில பகுதிகளில் சண்டைகள் தளர்த்தப்பட்டன.

ஆனால் சவூதி அரேபியாவில் இரு படைகளும் உறுதியளித்த போதிலும் துப்பாக்கிச் சண்டைகளும் குண்டுவீச்சுகளும் இன்னும் தொடர்கின்றன.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் இராணுவ வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் RSF படைககள் வீடுகளுக்கு கட்டளையிட்டு அவற்றை தளங்களாக மாற்றியுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...