துருக்கி ஜனாதிபதி தேர்தல்: அர்தூகானுக்காக ஒன்று திரண்ட 1.7 மில்லியன் மக்கள்!

Date:

துருக்கியின் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மே 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகானின் நேற்றைய பேரணியில் குறைந்தது 1.7 மில்லியன் மக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 21 வருடங்களாக தேர்தல்கள் மூலம் துருக்கியை ஆளுகின்ற நடப்பு ஜனாதிபதி அர்தூகானுக்கான ஆதரவை இந்தப் பேரணி எடுத்துக் காட்டுவதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திரண்டிருந்த பெருந்திரளான மக்களைப் பாராட்டிய ஜனாதிபதி அர்தூகான், கடந்த 21 ஆண்டுகளில் தனது அரசாங்கத்தின் சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டினார்.

மேலும், தனது அரசாங்கம் கடந்த இரண்டு தசாப்தங்களில் தேசிய வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாகவும் வேலைவாய்ப்புக்கள், உணவு, மற்றும் 10.5 மில்லியன் புதிய வீடுகளை யும் கட்டியுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

துருக்கிய ஜனாதிபதிப் பதிக்காக மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானுடன், கெமல் கிலிக்டரோக்லு, முஹர்ரம் இன்ஸ் மற்றும் சினான் ஓகன் ஆகியோரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...