தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் தோண்டி எடுக்கப்படுமா?

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க அவரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, உயிரிழந்த ஷாஃப்டரின் சடலத்தை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரியுள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக, இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ராஜீந்திர ஜெயசூரிய
அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

இதன்படி, இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதியை நிர்ணயித்துள்ளது.

பெப்ரவரி 17ஆம் திகதி, கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, ஐவரடங்கிய விசேட வைத்திய குழுவொன்றை நியமிப்பதற்காக விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழு பெப்ரவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...