நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

Date:

இலங்கையிலிருந்து 500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனவும் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் 86 நோயாளர்களும், கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 48 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 36 நோயாளர்களும், ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு, கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 218 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஏனைய 21 மாவட்டங்களில் இருந்து 282 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தொழுநோயைக் குணப்படுத்துவதற்கு மிகவும் வெற்றிகரமான மருத்துவ முறைகள் இருந்தும், சமூகத்தில் இன்னும் நிலவும் தவறான எண்ணங்களால், பல நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை கிளினிக்குகளுக்குச் செல்லாமல் தங்கள் நிலையை மோசமாக்கியுள்ளனர்.

இந்த நோய்க்கு முறையான சிகிச்சை அளித்தால், ஆறு மாதங்களுக்குள் குணமாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...