மின் கட்டண உயர்வின் தாக்கம் தொடர்பில் உலக வங்கி உதவியுடன் மதிப்பீடு செய்ய நடவடிக்கை!

Date:

நாட்டிலுள்ள வறிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு மின்சார அதிகரிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கியின் உதவியை கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஆய்வறிக்கை இன்று காலை சமர்ப்பிக்கப்பட்டது.

வறுமை மற்றும் சமபங்கு உலகளாவிய நடைமுறை தொடர்பில் உலக வங்கி குழு இந்த விளக்கக்காட்சியை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து கட்டணக் கட்டமைப்பு ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து முழுமையான மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை தாம் கோருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...