வெசாக் காலப்பகுதியில் கொவிட் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவும்

Date:

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் கொவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் சமித கினிகே மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் சுமார் ஏழு கொவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கொவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெசாக் பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என்றும், மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...