இலங்கைக்கான புதிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ள சீனாவின் ‘Air China’!

Date:

சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை செங்டு மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையே விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செங்டு தியான்ஃபு (Tianfu) சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரும் விமானங்கள் குறித்த தினங்களில் இரவு 08:55 க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

அத்துடன், செங்டுவுக்கான விமானம் இரவு 10:15 க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...