இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் Rosatom நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Date:

இரு அணு உலைகளுடனான 300 மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி துறையில் பிரபல நிறுவனமான ரொஸெடம் (Rosatom) உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நேற்று (14) நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட போதே இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது 300 மெகாவாட் ஆற்றல் கொண்ட பாரிய செயற்திட்டம் எனவும் தெரிவித்தார்.

கடந்த நாட்களில் கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருப்பது எரிசக்தி நெருக்கடியில் இருந்து விடுபட பெரும் ஆறுதலாக உள்ளது என தெரிவித்த தூதுவர், அதன் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவு தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகமையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை ஆய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த செயற்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நான்கு பகுதிகளில் ரொஸெடம் (Rosatom) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...