‘உள்ளூர் முட்டைகளை 44 ரூபாவுக்கு வழங்க முடியும்’

Date:

சதொசவின் ஊடாக உற்பத்தி பொருட்களை வழங்க முடியுமெனின், உள்ளூர் முட்டைகளை 44 ரூபா தொடக்கம் 46 ரூபா வரை உத்தரவாதத்துடன் வழங்க முடியும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடி கோழி உற்பத்தி தொடர்பில் எமது உற்பத்தி செலவுகளை அவர்களுக்கு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, சுமார் 1600 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியை 1400 ரூபாவாக குறைக்க முடிந்ததாக தெரிவித்தார்.

முக்கியமான கால்நடை தீவனப் பொருளான சோளம் தட்டுப்பாடடைந்த காரணத்தினால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவ்வாறான நிலைமைகளில் 95 வீதமான சோளத்தை வெளிநாட்டு விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...