எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு: ஆலோசனைக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர்

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்காக சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீடு வழக்கை ஆராய்வதற்காக சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு உதவ ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆகியோரே அவர்கள்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் இவர்கள் நியமிக்கப்பட்டதாக அதன் தலைவர் சட்டத்தரணி அசேல ரெக்கவ தெரிவித்தார்.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் ஊடாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஆதரவை இந்த வழக்கிற்கு வழங்குவதாகவும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...