ஒரு நாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணம் குறைப்பு

Date:

ஒரு நாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாள் சேவை மூலம் கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்ட நிலையில் தற்போது அதனை 15,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனை குறைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய திட்டத்தின் கீழ், ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்போர் வழமையான முறையில் 14 நாட்களுக்குள் தமக்கான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...