கின்னஸ் சாதனை படைக்க களமிறங்கும் விமானப்படை வீரர்!

Date:

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த, இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட வீரர் கோப்ரலாக ரொஷான் அபேசுந்தர, கின்னல் உலக சாதனை படைப்பதற்காக தயாராகி வருகின்றார்.

குறித்த நிகழ்வு, நாளை காலை 6 மணிக்கு கல்கிசை கடற்பகுதியில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு , உலக கடல் தினத்தை முன்னிட்டு ‘பிளாஸ்டிக் வேண்டாம் என்று கூறுங்கள்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இதன்போது, கோப்ரலாக ரொஷான் அபேசுந்தர விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 கிலோகிராம் எடையுடைய பிளாஸ்டிக் மூடையை முதுகில் கட்டி இழுத்து கொண்டே நீந்திச் செல்லவுள்ளார்.

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர கடந்த2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனையை நிலைநாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் குறித்த நீச்சல் சாதனையை முறியடித்து வெற்றி ஒருவன் செய்தி பிரிவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...