சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் புற்றுநோய் தடுப்பு ஊசிகள்-மருந்துகள் ஆணையம் அதிர்ச்சி தகவல்!

Date:

சருமத்தை வெண்மையாக்க குளுடாதியோன் (Glutathione) தடுப்பூசிகளை பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதான உணவு மற்றும் மருந்து பரிசோதகர் அமித் பெரேரா இது தொடர்பில் கூறுகையில்,

புற்றுநோயாளிகளின் சிக்கல்களைக் குறைக்க குளுடாதியோன் குறைந்த அளவுகளில் கொடுக்கப்படுகிறது.

சில தனியார் வைத்தியசாலைகள் இந்த தடுப்பூசியை அழகுசாதன நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றன. மேலும், சருமத்தை வெண்மையாக்க வரும் வாடிக்கையாளர்களிடம் சுமார் 100,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு வயதுடைய ஆண் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சருமத்தை வெண்மையாக்கவும், பளபளக்கவும் குளுடாதியோன் மாத்திரைகள் மற்றும் க்ரீம்களைப் பயன்படுத்துவதற்கு சட்டப்படி அனுமதியுள்ளது. ஆனால், தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று அமித் பெரேரா தெரிவித்திருந்தார்.

“தடுப்பூசியைப் பயன்படுத்துபவர்கள் பல பக்க விளைவுகளை உருவாக்குகிறார்கள்.

குறிப்பாக சிறுநீரக பிரச்சினைகள், இரத்த நாளங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பல்வேறு தைராய்டு கோளாறுகள், இந்த ஊசிகளை பயன்படுத்தும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சலூன்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...