சீனாவில், உணவகமொன்றில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: 31 பேர் உயிரிழப்பு

Date:

சீனாவில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

டிராகன் படகு திருவிழாவுக்காக சீனாவில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதை கொண்டாட பலர், நேற்றிரவு யின்சுவான் நகரில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் குவிந்திருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்தது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி, உணவகம் முழுவதும் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

தீயில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...