சீமெந்து, கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலை குறைவடையும்!

Date:

அடுத்த சில நாட்களில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மற்றும் கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அனைத்து சங்கங்களுடனும் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் உற்பத்தி நிறுவனங்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூலப்பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் துறையில் சரிவு ஏற்பட்டிருப்பது இதன் போது தெரியவந்துள்ளது.

“எனவே, சிமெந்து உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடைக்கு, குறைந்தபட்சம், 300 ரூபா முதல், 500 ரூபா வரை, விரைவில் விலையை குறைக்கச் சொன்னேன்.

இந்த விலைக் குறைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடைமுறைக்கு வரும் என அமைச்சு நம்புகிறது”

கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலையையும் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...