சுகாதார அமைச்சின் 1794 வாகனங்களை காணவில்லை: கோபா குழு அறிக்கை

Date:

சுகாதார அமைச்சின் 259 வாகனங்கள் வெளிதரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பொது கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோபா குழு ) தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அதன்படி, சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள், 679 மோட்டார் வாகனங்களும், 1115 மோட்டார் சைக்கிள்களும் உள்ளடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பாலான கார்கள் தற்போது சுகாதார அமைச்சிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கணக்காய்வின் மூலமாக 425 வாகனங்கள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர முடிந்துள்ளதோடு, அவை தொடர்பில் முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளதா என்பதை கண்டறிவது கடினமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1115 மோட்டார் சைக்கிளில் 11 மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.

மேலும், இவற்றில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 51 வாகனங்கள் காணாமல்போயுள்ளதாகவும், இந்த வாகனங்களின் பெறுமதி தொடர்பான தகவல்களோ அல்லது இந்த வாகனங்கள் பற்றிய தகவல்களை தேடியறிய முடியவில்லை என, தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.

ஜனாதிபதி செயலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...