ஜிம்பாப்வே உலகக் கிண்ண மைதானத்தில் தீ விபத்து!

Date:

ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மைதானத்தின் தெற்கு முனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. மேலும் 3 இற்கும் அதிகமான குரூப் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகள் மற்றும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டிக்கு இந்த மைதானம் பயன்படுத்தப்படுமா? என ஆய்வுக்குப் பிறகு தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...