துருக்கி ஜனாதிபதி அர்தூகானை சந்தித்த சபாநாயகர்!

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, துருக்கி ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தயிப் அர்தூகானின் உத்தியோகபூர்வ அரச வைபவத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பல வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சபாநாயகர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் உலகையே உலுக்கிய துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்த இலங்கைக்கு ஜனாதிபதி அர்தூகான் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...