துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் அர்தூகான் எழுதிய “A Fairer World Is Possible’ என்ற உலகளாவிய நீதிக்கான போராட்டத்தை விவரிக்கும் புத்தகம் விற்பனைக்கு வருகின்றது.
இப்புத்தகத்தில், அநீதி, அகதிகள் நெருக்கடிகள், சர்வதேச பயங்கரவாதம் மற்றும் இஸ்லாமோஃபோபியா உள்ளிட்ட உலகளாவிய அரசியல் எதிர்கொள்ளும் முட்டுக்கட்டைகளை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
துருக்கி ஜனாதிபதி, உலகளாவிய அமைப்புடன் தொடர்புடைய அதன் சட்டபூர்வமான உள்ளடக்கம், செயல்திறன், பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத்தின் குறைபாடுகள் போன்றவற்றின் கவனத்தை ஈரத்துள்ளார்.
இஸ்தான்புல்லை தளமாகக் கொண்ட டர்குவாஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படும் இப்புத்தகம் ஆங்கிலம், அரபு, ஜெர்மன், பிரஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்த புத்தகத்தின் விற்பனையின் இலாபம் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்திற்கு செல்லவுள்ளது.