விற்பனைக்கு வரும் ரசெப் தயிப் அர்தூகான் எழுதிய ‘A Fairer World Is Possible’

Date:

துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் அர்தூகான் எழுதிய “A Fairer World Is Possible’ என்ற  உலகளாவிய நீதிக்கான போராட்டத்தை விவரிக்கும் புத்தகம் விற்பனைக்கு வருகின்றது.

இப்புத்தகத்தில், அநீதி, அகதிகள் நெருக்கடிகள், சர்வதேச பயங்கரவாதம் மற்றும் இஸ்லாமோஃபோபியா உள்ளிட்ட உலகளாவிய அரசியல் எதிர்கொள்ளும் முட்டுக்கட்டைகளை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

துருக்கி ஜனாதிபதி, உலகளாவிய அமைப்புடன் தொடர்புடைய அதன் சட்டபூர்வமான உள்ளடக்கம், செயல்திறன், பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத்தின் குறைபாடுகள் போன்றவற்றின் கவனத்தை ஈரத்துள்ளார்.

இஸ்தான்புல்லை தளமாகக் கொண்ட டர்குவாஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படும் இப்புத்தகம் ஆங்கிலம், அரபு, ஜெர்மன், பிரஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த புத்தகத்தின் விற்பனையின் இலாபம் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்திற்கு செல்லவுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...