பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 87 வீதமானவர்கள் பெண்கள் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு, கலைப் பீடத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட 1,130 மாணவர்களில் 980 பேர் பெண்களாவர்.
சமீபத்திய ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.