பாடசாலை அதிபரை ஹஜ் கடமையை நிறைவேற்ற வழியனுப்பி வைத்த பாடசாலைச் சமூகம்!

Date:

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக்  புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அப்பாடசாலையின்  பழைய மாணவர் சங்கத்தினர் (200,000/=) இரண்டு இலட்சம் ரூபா பணத்தை அன்பளிப்பு செய்தனர்.

நாளை 13 ஆம் திகதி பயணமாகவுள்ள அதிபரை  வழியனுப்பும்  நிகழ்வு இன்று (12) பாடசாலையில் சங்கத்தின்  ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதேவேளை கடையாமோட்டை தேசிய பாடசாலையில் விஞ்ஞான துறையை ஆரம்பித்து பல மாணவர்களை வைத்திய துறைக்கும், விஞ்ஞான பட்டதாரிகளையும் உருவாக்கிய ஓய்வு பெற்றுச் சென்ற ஏ.எஸ்.எம். மாஹிர் ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக  SCIENCE FORUM, SCIENCE UNION ஆகியோர் இணைந்து 100,000/= ரூபா காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எச்.எம்.ஹாரூன் உட்பட அதன் உறுப்பினர்கள், பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் அதன் செயலாளர் சீ.எம். தாவூத் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம்.ஜெஸீர் , ஆசிரியர்கள் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகள் யாவும் மதியபோசணத்துடன் நிறைவு பெற்றது. இதேவேளை கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதால் பதில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஏ. அஷ்ரப் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...