பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

Date:

தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடக்கும் கொலைகள் சம்பந்தமாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து நேற்று நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொலையாளிகள் சம்பந்தமாக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இதற்கான நடவடிக்கைகளின் போது, தேவையற்ற அழுத்தங்களை கொடுக்கவும் தலையீடுகளை செய்யவும் எவருக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் அமை்சசர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் கடமையாற்றும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் திறமையின்மையே இந்த மாகாணங்களில் கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அப்படியான அதிகாரிகளை உடனடியாக நீக்கி விட்டு, தகுதியான அதிகாரிகளை நியமிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...