பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

Date:

தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடக்கும் கொலைகள் சம்பந்தமாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து நேற்று நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொலையாளிகள் சம்பந்தமாக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இதற்கான நடவடிக்கைகளின் போது, தேவையற்ற அழுத்தங்களை கொடுக்கவும் தலையீடுகளை செய்யவும் எவருக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் அமை்சசர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் கடமையாற்றும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் திறமையின்மையே இந்த மாகாணங்களில் கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அப்படியான அதிகாரிகளை உடனடியாக நீக்கி விட்டு, தகுதியான அதிகாரிகளை நியமிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...