மக்களின் ஆயுட்காலம் குறைந்துள்ளது: கடன் சுமையே பிரதான காரணம்!

Date:

இலங்கையில் சிசு மரண வீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்களின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாகவும் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின்படி, சிசு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கைக்கு அடுத்தபடியான சாம்பியா மற்றும் கானா ஆகிய நாடுகள் உள்ளன.

இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலைமைக்கு அந்நாடுகளின் அதிக கடன் சுமையே பிரதான காரணம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், இலங்கை, சாம்பியா, கானா ஆகிய நாடுகள் சீனாவிடம் கடன் பெற்றுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைகளில் சீனா உரிய முறையில் தலையிடவில்லை என பெரும்பாலான மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்துவதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...