மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம்!

Date:

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மாதம் 09 முதல் இது ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (ஏஏஎஸ்எல் ) நேற்று(26.06.2023) உறுதிப்படுத்தியுள்ளது.

ஏஏஎஸ்எல் இன் தகவலின்படி, தாய் ஏர் ஏசியா பிரபலமான பாங்கொக் முதல் கொழும்பு வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு முறை மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கும்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தினசரி 18,000-19,000 பயணிகளும் 110-120 விமானங்களும் சேவையில் உள்ளதாக விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) தெரிவித்துள்ளது.

“சர்வதேச விமான நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படுவதையும், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைகிறது” என்று விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) மேலும் கூறியது.

இதேவேளை கத்தாரின் விமான நிறுவனமான,  கத்தார் ஏர்வேஸ் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...