முட்டை,கோழி இறைச்சி விலை மூன்று மாதங்களுக்கு பின்னர் குறையும்

Date:

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கோழிப்பண்ணை தொழில் வளர்ச்சி காரணமாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

இலங்கைக்கு முட்டைகளை தொடர்ந்து இறக்குமதி செய்வதல்ல, கால்நடை வளர்ப்புத் திட்டத்தை வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்குவதற்கான ஏற்றுமதி சார்ந்த திட்டமாக மாற்றுவதே தனது இலக்கு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு கோழிப்பண்ணை தொழில் கணிசமான பங்களிப்பை வழங்குவதுடன், நாடு கோழிப்பண்ணை உற்பத்தியில் பல வருடங்களாக நிலையான வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்த வளர்ச்சியானது முட்டை மற்றும் கோழி இறைச்சி இறக்குமதியின் தேவையை குறைப்பதற்கு வழிவகுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...