அமெரிக்க ஜனாதிபதிக்கும் – உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடத்தை தாண்டியுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமலேயுள்ளது.

இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் எனப்படும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார்.

இதனால் ரஷ்யாவில் ஆயுத புறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்தார். இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்து விவாதித்ததாகவும், அமெரிக்கா – உக்ரைன் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...