அலி சப்ரி ரஹீம் எம்.பி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர்: மார்ச் 12 இயக்கம்

Date:

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அலி சப்ரி ரஹீம், அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்ததற்காக அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில்,“மார்ச் 12 இயக்கம்” இதனை தெரிவித்துள்ளது.

மார்ச் 12 இயக்கம், எம்.பி.யின் முந்தைய பயணங்களை அவர் இதேபோன்ற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் அந்த இயக்கம் கவலை தெரிவித்ததுடன், சட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த மார்ச் 12 இயக்கம், எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகர் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரைப் பாதுகாக்கும் நகர்வுகளைக் கண்டித்து, மார்ச் 12 இயக்கம், பாராளுமன்றமும் ஜனாதிபதியும் செயலற்ற தன்மையால் இலங்கை தனது சட்டங்களை மதிக்காத நாடாக அங்கீகரிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...